நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் அப்துர்ரஹ்மான் மாகணசபை உறுப்பினர் சிப்லி பாரூக் தொடர்பில் முன் வைத்த குற்றச் சாட்டுக்கள் தொடர்பாக தேசிய தவ்கீத் ஜமாதினரின் மத்தியஸ்தத்தில் இடம் பெற்ற கலந்துரையாடலில் மாகாணசபை உறுப்பினரின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது .
இதுவரை காலமும் தக்வா தாரியகவும் நேர்மையானவராகவும் மக்கள் முன் வலம் வந்து கொண்டிருந்த இவர் ரஹ்மானின் கேள்விகளுக்கு விழி பிதுங்குவதை காணொளி மூலம் காணக் கிடைக்கிறது.
நகரசபைச் செயலாளர் தொடர்பில் இவரது இரட்டை முகத்தை உண்மையான தகவல்களின் மூலம் நிருபித்துள்ளார் .இருந்த போதிலும் மீண்டும் மீண்டும் பொய்களை கூறி தனது ஊழல்களை மறைக்கத் துடிக்கும் சிப்லி பரூக்கின் வாதங்களை காணொளி ஊடாக காணமுடிகிறது .